பழனி அருகே எரமநாயக்கன்பட்டியில் ஏ.டி.காலனியில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.