சென்னை சேத்துப்பட்டு சிக்னல், வில்லேஜ் ரோடு சந்திப்பில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மூக்கை மூடிய படி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.