பழனி ராஜாஜி ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும்.