ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிய 5 மாடி கட்டிடத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லை. இதனால் இந்த கழிவுநீர் தரைதளத்தில் தேங்கி சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆஸ்பத்திரியில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?