மதுரை எல்லீஸ்நகர் மகப்பூபாளையம் பகுதியில் செல்லும் கிருதுமால் நதியில் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளன.. இதனால் தண்ணீர் செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?