தேனியை அடுத்த சீலையம்பட்டியில் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த ஒரு மாதமாக தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.