சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் கே.பிளாக்கில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியை கடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.