நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழி பாலத்தில் இருந்து குருந்தன்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பேயன்குழி பஸ் நிறுத்தத்தில் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டு மழைநீர் ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் வடிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் சீராக வடிந்தேட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிகுமார்,மொட்டவிளை.