கழிவுநீர் வாய்க்கால் பாலம் வேண்டும்

Update: 2025-01-12 12:53 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சிறுவயலூர் ஊராட்சியில் தேவேந்திர குல தெருவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிவுநீர் வாய்க்காலின் மேல் பகுதியில் பாலம் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே இருக்கும் வாய்க்காலில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்