சென்னை மாதவரம், படவேட்டம்மன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சாலை அருகில் திறந்து கிடப்பதால் சிறுவர்கள் மற்றும் வயதானோர் தவறி விழும் நிலை உள்ளது. எனவே, ஆபத்தை உணர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் கால்வாய் மூடியை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.