அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் ஊராட்சி மாருதி நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே மாருதி நகரில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?