பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.