கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2024-09-15 12:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பேரமனூர் தரணிஸ்கொயர், லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் அதிகப்படியான செடி, கொடிகள் மூடிக்கொண்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து வருவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்