சுகாதார சீர்கேடு

Update: 2024-09-15 12:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வார்டு- 42, ராஜகீழ்பாக்கம் சிக்னல் அருகிலுள்ள அப்பர் தெருவில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஆஸ்பத்திரியின் பின்புறம் குடியிருப்பு பகுதி உள்ளது. அந்த ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் குடியிருப்பு பகுதியில் வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்து நொிசல் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்