கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2024-09-01 15:03 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், நீர்வள்ளுர் கிராமம் பகுதியில் குட்டையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் வெளியேறாமல் சாலை அருகில் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் அதிக அளவு வீசுகிறது. மேலும், அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்