சுகாதார சீர்கேடு

Update: 2024-09-01 09:17 GMT

கோவை தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர் நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணன், தெலுங்குபாளையம்.

மேலும் செய்திகள்