சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2024-07-28 17:53 GMT

மதுரை மாநகராட்சி 4 - வது வார்டு இந்திராநகர் மற்றும் கருப்பசாமி நகர் பகுதிகளில் தெருக்களில் கால்வாய்கள், சாக்கடைகள் முறையாக சுத்தம் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். பல தெருக்களில் சாக்கடைகள் நிரம்பி குப்பைகள் அடைத்து உள்ளது. மழை பெய்தால் சாலை முழுவதும் சாக்கடைகள் வழிந்தொடுகின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்