தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-07-21 17:29 GMT

தேனியை அடுத்த ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் மழைக்காலத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்