கழிவுநீர் கால்வாய் மூடி சேதம்

Update: 2024-07-14 11:29 GMT

சென்னை கொளத்தூர், செங்குன்றம் மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இதன் மூடி உடைந்து உள்ளதால் செங்கல், கட்டைகளை கொண்டு அந்த பகுதி மக்கள் பள்ளத்தை மூடியுள்ளனர். இருப்பினும் பள்ளம் பெரிதாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்