கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

Update: 2024-07-07 15:51 GMT
  • whatsapp icon
கடலூரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் சாலையில் அரசு பெண்கள் பள்ளி எதிரே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வழிந்து ஓடுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்