கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-23 11:24 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பல்லாவரம் திருத்தணி நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பராமரிக்கப்படமால் உள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் குப்பையும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்