சென்னை ஓட்டேரி, சத்தியவாணி முத்து நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.