சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையம் செல்வதற்கு சுரங்க பாதை உள்ளது. இந்த சுரங்க பாதை சரியாக பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. குப்பைகள்,கழுவுநீர் என அந்த இடம் முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசிகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சுரங்க பாதையை சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.