சுகாதார சீர்கேடு

Update: 2024-06-16 11:56 GMT

ராமநாதபுரம் நகரில் வண்டிக்கார தெருவையும் லேத்தம்ஸ் பங்களா தெருவையும் இணைக்கும் வாட்டர் டாங்க் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்  சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை  எடுப்பார்களா?

மேலும் செய்திகள்