தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால்

Update: 2024-06-09 11:43 GMT

திருச்சி சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தற்போது தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் மழை பெய்யும்போது மழை நீருடன் கழிவுநீர் கலந்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்