சாலை ஓரத்தில் கழிவுநீர்

Update: 2024-06-09 10:49 GMT

திருவள்ளூர் மாவட்டம், காரனோடை ஜி.என்.டி. சாலை பைபாசில் கழிவுநீர் டிராக்டர் மூலம் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்