செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காமராஜபுரம் பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அதில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. சாலையின் அருகே கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளதால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.