நோய் பரவும் அபாயம்

Update: 2024-05-26 11:52 GMT


கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருகே உள்ள செல்வநகர் பகுதியில் ரெயில் பாலம்கீழே கழிவு நீர் செல்ல கால்வாய் பாதி மட்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில்
கால்வாய் இல்லாததால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. மழை பெய்யும்போது இந்த கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் கழிவு நீராகிறது. மேலும், தேங்கியுள்ள கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவு நீர் வாய்க்கால் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்