அதிகாரிகளின் மெத்தனபோக்கு

Update: 2024-05-26 10:22 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் வடிகால்வாய் உள்ளது. இதில் இருந்து கடந்த சில வாரங்களாக கழிவுநீர் வெளியே கசிந்து சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனபோக்குடன் செயல்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்