சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-05-19 17:58 GMT
கடலூர் மாநகராட்சி 29-வது வாா்டு மகாலட்சுமி நகரில் கழிவுநீரானது சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்