கால்வாயில் அடைப்பு

Update: 2024-05-19 12:06 GMT

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு ராயன் தெரு பகுதியில் 100 மேற்பட்டோர் குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதியில் புதிய நூலகத்தின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் மற்றும் மழைநீர் சேர்ந்து சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்