சாக்கடை கால்வாயில் அடைப்பு

Update: 2024-05-12 17:10 GMT

தேனியை அடுத்த சீப்பாலக்கோட்டை ஊராட்சி 1-வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் தெருவில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்