கழிவுநீர் கால்வாய்க்கு மூடி

Update: 2024-05-05 18:09 GMT

தர்மபுரி இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டது. சுமார் 4 அடி ஆழம் கொண்ட இந்த கால்வாயில் மேல்பகுதி மூடப்படாமல் காணப்படுகிறது. இந்த சாலையில் சென்று வரும் சிறுவர், சிறுமிகள் இந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. இதேபோல் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்கள் சற்று கவன குறைவாக இருந்தாலும் கழிவுநீர் கால்வாயில் கால் தடுமாறி விழும் சூழல் உள்ளது. எனவே அதிக பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து கொண்ட இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயின் மேல் பகுதியை மூடி அமைத்து இடைவெளி இல்லாமல் மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்