தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால்

Update: 2024-05-05 18:01 GMT
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி கம்பர் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் நீண்ட நாள்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கழிவுநீர் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாய்க்காலில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்