நடவடிக்கை தேவை

Update: 2024-05-05 10:02 GMT

வடக்கு சூரங்குடி வத்தக்காவிளை பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதுடன், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்