பாதசாரிகள் அவதி

Update: 2024-05-05 09:41 GMT

நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் இருந்து சவேரியார் சந்திப்புக்கு செல்லும் சாலையின் இடது புறத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையின் மீது போடப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. ஒரு சில கடைகள் முன்பு மட்டுமே சிலாப்புகள் உள்ளன. இதனால், கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாவதுடன், நடைபாதை இல்லாததால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பாதசாரிகள் நலன்கருதி கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்