புகார் எதிரொலி

Update: 2024-04-28 13:05 GMT

சென்னை கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரில் ஈஸ்வரன் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் நுழைவாயில் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் மூடி இல்லாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வந்து புதிய கழிவுநீர் கால்வாய் மூடியை அமைத்து தந்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்