தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2024-04-28 13:02 GMT
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தண்டலை புத்தூர் ஊராட்சி வேளக்காநத்தம் கிராமம் கிழக்கு காலனியில் பாழந்தடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை சுத்தம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்