கழிவறையில் கடும் துர்நாற்றம்

Update: 2024-04-21 12:29 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மதுரை, தஞ்சை, கரூர், சேலம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் சென்னை, தஞ்சை பகுதிகளுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆண்களுக்கு கழிவறை கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்