நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2024-04-14 12:56 GMT

திருச்சி சூப்பர் பஜார் வாலாஜா காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள எஸ்.எஸ்.பி.ரோடு பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூடி வழியாக கடந்த 2 நாட்களாக கழிவுநீர் வெளியேறி ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் கழிவுநீர் செல்வதினால் தினமும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்