தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2024-04-07 11:48 GMT

திருச்சி மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட சவேரியார் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்