நோய் பரவும் அபாயம்

Update: 2024-04-07 11:10 GMT

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையத்தில் இருந்து தேவயம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது, அண்ணா நகர் பகுதி. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டினார்கள். அந்த குழிைய மூடவில்லை. அதில் வீடுகளில் இருந்து வெளிேயறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்