பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யப்படுமா?

Update: 2024-03-31 17:16 GMT
விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்