மாநகராட்சியின் அலட்சியம்

Update: 2024-03-24 10:59 GMT

சென்னை மடிப்பாக்கம், கார்த்திகேயன் நகர் 4-வது தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் வீடுகள் இருப்பதால், வீடுகளுக்கு பொதுமக்கள் செல்ல பள்ளத்தின் மேல் மரப்பலகை போடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த பலகை சேதமடைந்து உள்ளது. மேலும், மழைநீர் வடிகால்வாய் பணி ஒரு மாதங்களுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளம் தோண்டிய பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய் உடைந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்