தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-17 12:54 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், முல்லை நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தங்களது வீட்டிற்கு முன்பு சிறிய அளவிலான பள்ளம் தோண்டி அதில் கழிவு நீரை விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்