கால்வாயில் அடைப்பு

Update: 2024-03-17 12:31 GMT

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி கூட்டுறவு வங்கி அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் உள்ள மேல் மூடி உடைந்து கிடக்கிறது. மேலும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதோடு அந்த வழியாக செல்பவர்கள் தவறி விழும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாய் மூடியை சரி செய்வதோடு அடைப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்