நடவடிக்கை தேவை

Update: 2024-03-17 08:11 GMT

தக்கலை கீழகல்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்லன்விளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் தெருவில் பாய்ந்து அருகில் உள்ள வள்ளியாற்றில் கலக்கிறது. இதனால், அந்த தெருவில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு பெரும் அவதிக்குள்ளாவதுடன், ஆற்றுநீரும் மாசடைந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகளில் இருந்து கழிவுநீர் தெருவில் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தியா, கொல்லன்விளை.

மேலும் செய்திகள்