தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-10 13:19 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி, கீழக்கரணை தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால், கொசுக்கள் அதிகமாக உற்பபத்தி ஆவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், கழிவு நீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஊராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் அகற்றவும், மீண்டும் தேங்காமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்