நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-10 12:17 GMT

சரவணம்பட்டி வி.ஐ.பி. சென்டரல் டவுன் மற்றும் குமரகுரு கல்லூரி அருகே செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதேபோல் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்வதோடு புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்