சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-03-10 11:12 GMT

சென்னை எழும்பூர், ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதில் இருந்து கழிவு நீரானது நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ரெயில் நிலையத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவதால் அந்த வழியே செல்லும் போது மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்